திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் மரணம்! சிக்கிய கணவன், மாமியார்..அம்பலமான அதிர்ச்சி உண்மை

Tamil nadu Crime Death
By Sivaraj Apr 01, 2023 09:55 AM GMT
Report

தமிழக மாவட்டம் காஞ்சிபுரத்தில் வரதட்சணை கொடுமையில் புதுப்பெண் கொலை செய்யப்பட்டு, தூக்கில் தொங்கவிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுமணப்பெண்

காஞ்சிபுரத்தின் குன்றத்தூரை அடுத்த அமரம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோகுல கண்ணன் (32). இவருக்கும் லோகப்பிரியா என்ற பெண்ணுக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.

கோகுல கண்ணன் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக கூறியுள்ளார். இதனால் திருமணத்தின்போது பெண் வீட்டார் 30 சவரன் நகை, ஒரு லட்சம் ரொக்கம் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வரதட்சணையாக வழங்கியதாக கூறப்படுகிறது.

திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் மரணம்! சிக்கிய கணவன், மாமியார்..அம்பலமான அதிர்ச்சி உண்மை | Newly Married Woman Killed By Husband Tamilnadu

திருமணம் முடிந்த சில தினங்களில் மாப்பிள்ளைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், கோகுல கண்ணன் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

அதிர்ச்சியடைந்த மனைவி

இந்த நிலையில் ஒருநாள் கணவரின் தலையைப் பார்த்து லோகப்பிரியா அதிர்ச்சி அடைந்துள்ளார். ஏனெனில் அவர் தலையில் விக் வைத்து இதுநாள் வரை ஏமாற்றி வந்துள்ளார்.

மேலும், திருமணத்திற்கு பிறகு அவர் வேலைக்கு செல்லாமல் இருந்ததால், லோகப்பிரியா அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது அவர், நீங்கள் கூறியபடி வரதட்சணை தராமல் ஏமாற்றியுள்ளீர்கள் என்று கூறி சண்டையிட்டுள்ளார்.

திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் மரணம்! சிக்கிய கணவன், மாமியார்..அம்பலமான அதிர்ச்சி உண்மை | Newly Married Woman Killed By Husband Tamilnadu

அதேபோல் ஐ.டியில் வேலை பார்ப்பதாக அவர் கூறியதும் பொய் என லோகப்பிரியாவுக்கு தெரிய வந்துள்ளது.

கொலை

இவற்றை அறிந்த புதுமணப்பெண் ஏமாற்றப்பட்டுவிட்டோமே என நினைத்து கதறி அழுதுள்ளார். இதற்கிடையில் வரதட்சணை குறித்து கேட்ட கோகுல் கண்ணன், தனது மனைவியை கடுமையாக தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

அதன் பின்னர் தன் தாயிடம் நடந்ததைக் கூறி, இருவரும் சேர்ந்து லோகப்பிரியாவின் சடலத்தை தூக்கில் தொங்கவிட்டுள்ளனர். தன் மனைவி தற்கொலை செய்துகொண்டதாக அவர் நாடகமாடியுள்ளார்.

பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் நடத்திய விசாரணையில் கோகுல கண்ணன் தன் மனைவியை கொலை செய்தது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து கோகுல கண்ணன் மற்றும் அவரது தாயார் ராஜேஸ்வரி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.    

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US