கிராமத்தில் உள்ள வீட்டில் இருந்து இரவில் தனியாக வெளியில் சென்ற புதுப்பெண்! திருமணமான சில மாதத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
இந்தியாவில் காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது. கர்நாடகாவின் பெக்கா கிராமத்தை சேர்ந்தவர் பூஜா (20).
இதுபோல சக்லேஷ்புரா அருகே மலலி கிராமத்தில் வசித்து வருபவர் அஸ்வத். இவர்கள் 2 பேருக்கும் கல்லூரியில் படிக்கும் போது பழக்கம் உண்டானது. அந்த பழக்கம் காதலாக மாறியது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் பூஜாவின் பெற்றோருக்கு தெரியவந்தது.
ஆனால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் பூஜாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதனால் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பூஜா வீட்டைவிட்டு வெளியேறி அஸ்வத்தை காதல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2 பேரும் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பூஜாவிடம் சண்டை போட்ட அஸ்வத் வரதட்சணை வாங்கி வரும்படி கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த பூஜா தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு கிராமத்தில் ஓடும் ஹேமாவதி ஆற்றை நோக்கி சென்ற பூஜா அதில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். பின்னர் ஆற்றில் மிதந்து வந்த அவர் சடலத்தை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுபற்றி அறிந்த பொலிசார், தீயணைப்பு படையினர் அங்கு சென்று பூஜாவின் உடலை தேடினர்.
நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் பூஜாவின் உடல் மீட்கப்பட்டது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விசாரணையில் வரதட்சணை கொடுமையால் பூஜா ஆற்றில் குதித்து தற்கொலை செய்தது தெரிந்தது.
இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து அஸ்வத்தை பிடித்து விசாரித்து வருகின்றனர்.