திருமணமாகி வந்த நாளில் இருந்து! என்னால் முடியவில்லை... ஒரு மாதத்தில் புதுப்பெண் தற்கொலை
தமிழகத்தில் திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரின் உடலை வாங்க மறுத்து குடும்பத்தார் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
என்னால் வாழ முடியாது
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் வசுமதி (23) பொறியாளரான இவருக்கும் வினோத் (31) என்பவருக்கும் கடந்த அக்டோபர் 30ஆம் திகதி திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த 26ஆம் திகதி வசுமதி தனது பெற்றோருக்கு போன் செய்து கணவர், மாமனார், மாமியோர் ஆகியோர் திருமணமாகி வந்த நாளில் இருந்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும், தன்னால் இங்கு வாழ முடியாது எனவும் கூறி அழுதார்.
இதையடுத்து வசுமதி தந்தை அத்தியப்பன் தனது மகள் வசுமதியை அழைத்து கொண்டு தனது வீட்டிற்கு வந்த நிலையில் மன வேதனையில் இருந்த அவர் கடந்த 30ஆம் திகதி தற்கொலை செய்தார்.
உடலை வாங்க மறுப்பு
இது குறித்த புகாரின் பேரில் பொலிசார் வினோத் மற்றும் அவர் பெற்றோர், சகோதரி மீது வழக்குப்பதிவு செய்த போதிலும் கைது செய்யவில்லை. தலைமறைவாக உள்ள அவர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.
இதனால் கோபமடைந்த வசுமதி குடும்பத்தார், உறவினர்கள் 4 பேரையும் கைது செய்தால் தான் உடலை வாங்குவோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து 3வது நாளாக போராட்டம் நீடிக்கும் நிலையில் வசுமதி சடலம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது