திருமணம் முடிந்த 3 மாதத்திற்குள் தூக்கில் தொங்கிய இளம் பெண்! இறப்பதற்கு முன் சில தினங்களுக்கு முன் பெற்றோரிடம் சொன்ன வார்த்தை
இந்தியாவில் திருமணம் முடிந்து மூன்று மாதங்களுக்குள் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் Sasthamkotta பகுதியைச் சேர்ந்தவர் தன்யா தாஸ். இவருக்கும் ராஜேஸ் என்பவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
ராஜேஸ் லொரி ஓட்டுனராக உள்ளது. இந்நிலையில், திருமணம் முடிந்த சில நாட்களிலே கணவர் தன்னை துன்புறுத்துவதாக, தன்யா தாஸ் தன் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.
இந்நிலையில் சம்பவ தினத்தன்று ராஜேஸ் வேலைக்கு சென்று திரும்பிய போது, மனைவி தூக்கில் சடலமாக தொங்கி கிடப்பதைக் கண்டு அதிர்ந்துள்ளார்.
அதன் பின் இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்க, விரைந்து வந்த பொலிசார் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், பெண் வீட்டார் மாப்பிள்ளை மீது சந்தேகப்படுவதால், பிரேதபரிசோதனை முடிவுக்கு பின்னரே எதையும் சொல்ல முடியும் என்று கூறியுள்ளனர்.
ஏனெனில் கடந்த வெள்ளிக் கிழமை இந்த தம்பதிக்கிடையே கடுமையான வாக்குவாதம் நடந்துள்ளது, அதன் பின்னரே இந்த சம்பவம் நடந்துள்ளதால், இது நிச்சயமாக கொலை தான், ஆனால் அவன் நாடகமாடுவதாக உறவினர்கள் கூறிவருவதாக, அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.