திருமணமான முதலிரவில் புதுமாப்பிள்ளை உயிரிழப்பு! தாங்க முடியாத அதிர்ச்சியில் குடும்பம்
திருமணமான முதலிரவில் உயிரிழந்த புதுமாப்பிள்ளை.
மாரடைப்பால் உயிர் பிரிந்ததாக முதற்கட்ட தகவல்.
இந்தியாவில் திருமணமான முதலிரவில் புதுமாப்பிள்ளை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் மதனப்பள்ளியை சேர்ந்தவர் துளசி பிரசாத். இவருக்கும் சிரிஷா என்ற பெண்ணிற்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர் முதலிரவில் பிரசாத் சுயநினைவின்றி தனது அறையில் கிடந்தார்.
அவரை புதுப்பெண் சிரிஷா தட்டி எழுப்ப முயன்றும் அவர் எழாத நிலையில் குடும்பத்தாரை அழைத்தார். பின்னர் குடும்பத்தார் பிரசாத்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
tv9telugu
திருமணமான முதல் நாளிலேயே புதுமாப்பிள்ளை உயிரிழந்தது அவர் மனைவி மற்றும் மொத்த குடும்பத்தாரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரசாத் மாரடைப்பால் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது இயற்கை மரணம் என தொடர்ந்து தகவல் வருவதால் இதுவரை காவல்நிலையத்தில் புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.