வங்கக்கடலில் இன்று மாலை புயல் உருவாகிறது! வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
மத்திய வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த மண்டலமாகி மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இன்று காலை 5.30 மணி நிலவரப்படி ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு கிழக்கு தென்கிழக்குக்கு 510 கிலோ மீட்டர் தொலைவிலும், கலிங்கப்பட்டினத்தில் இருந்து கிழக்கு, வடகிழக்குக்கு 590 கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த புயல் மையம் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த புயலுக்கு குலாப் என்று பெயர் சூட்டப்பட் டுள்ளது. இப்புயல் இன்று மாலை அல்லது இரவுக்குள் தீவிர புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புயல் நாளை மாலை விசாகப்பட்டினம்-கோபால்பூருக்கும் இடையே வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா பகுதியில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
இதனால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் ஒரு சில மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு உள்ளது.
இந்த புயலையொட்டி நாகை, காரைக்கால், பாம்பன், எண்ணூர் துறைமுகங்களில் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மேலும் கடல் காற்று பலமாக வீசக்கூடும் என்பதால் குமரி கடல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.