அரசு பெண் ஊழியர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்! கையும் களவுமாக சிக்கிய நியூயார்க் ஆளுநர்
நியூயார்க் நகரத்தில் அரசு பெண் ஊழியர்களுக்கு கவா்னா் ஆண்ட்ரூ குவாமோ பாலியல் துன்புறுத்தல் அளித்திருப்பது விசாரணை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ குவாமோ, பாலியல் ரிதீயாக தங்களை கொடுமைப்படுத்தியதாக பல பெண்கள் கடந்த 2020ஆம் ஆண்டு அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தனர்.
இது தொடர்பாக 179 அரசு பெண் ஊழியர்களிடம் முதல்கட்ட விசாரணை லெடிஷியா ஜேம்ஸ் குழு தலைமையில் நடைபெற்றது.
விசாரணையின் முடிவில் ஆளுநர் ஆண்ட்ரூ குவாமோ பல பெண்களிடம் பாலியல் சில்மிஷம் செய்திருப்பது உறுதியானது.
இதுகுறித்து ஜேம்ஸ் வெளியிட்ட அறிக்கையில், விசாரணை 5 மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் ஆளுநர் ஆண்ட்ரூ குவாமோ அரசு பெண்களை வலுக்கட்டாயமாக தொடுதல், முத்தம் கொடுத்தல், கட்டிப்பிடித்தல், தவறாக பேசுதல் உள்ளிட்ட வகையில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
கவர்னருடன், சில அதிகாரிகள் கூட்டு சேர்ந்து அலுவலகத்தில் பணி சுமைகளை உருவாக்கி பெண்களை துன்புறுத்துள்ளனர்.
இந்த வழக்கில் ஆளுநருக்கு எதிராக 74,000 ஆவணங்கள், புகைப்படங்கள் போன்றவை சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.