பாகிஸ்தானுக்கு விளையாட சென்ற நியூசிலாந்து! ரத்து செய்யப்பட்டதாக திடீர் அறிவிப்பு
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தானுடான கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை ரத்து செய்துள்ளது நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக நியூசிலாந்து கிரிக்கெட் அணி கடந்த 2003-04-ம் ஆண்டுக்குப்பின் பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் தொடரில் விளையாடாமல் இருந்தது.
இந்த நிலையில் 17 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் விளையாட இருந்தது.
பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக எந்தவொரு சர்வதேச நாடுகளின் கிரிக்கெட் அணியும் அங்கு சென்று பல ஆண்டுகளாக கிரிக்கெட் தொடரில் விளையாடாத நிலையிலேயே நியூசிலாந்து தற்போது தைரியமாக கிரிக்கெட் தொடரில் பங்கேற்க சென்றது.
Earlier today, the New Zealand cricket board informed us that they had been alerted to some security alert and have unilaterally decided to postpone the series.
— Pakistan Cricket (@TheRealPCB) September 17, 2021
PCB and Govt of Pakistan made fool proof security arrangements for all visiting teams. 1/4
அதன்படி மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் நியூசிலாந்து விளையாடுவதாக இருந்தது. இதையடுத்து நியூசிலாந்து வீரர்கள் பாகிஸ்தானுக்கு சென்றனர்.
இதில் முதல் ஒருநாள் போட்டி இன்று நடக்கவிருந்தது, இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பாகிஸ்தான் தொடர் ரத்து செய்யப்படுவதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி தொடரானது காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நியூசிலாந்து அணியினர் பாகிஸ்தானில் இருந்து வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் தொடரை நியூசிலாந்து ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
We have assured the NZ cricket board of the same. The Prime Minister spoke personally to the Prime Minister of New Zealand and informed her that we have one of the best Intelligence systems in the world and that no security threat of any kind exists for the visiting team.
— Pakistan Cricket (@TheRealPCB) September 17, 2021
2/4
இந்த நிலையில் இந்த தொடர் ரத்தானது தொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், முன்னதாக இன்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தங்களுக்கு சில பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து எச்சரிக்கப்பட்டதாகவும் அதன் காரணமாக தொடரை ஒத்திவைக்க முடிவு செய்ததாகவும் எங்களுக்குத் தெரிவித்தது.
இது தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் நியூசிலாந்து பிரதமரிடம் பேசினார், அப்போது எங்களிடம் உலகின் மிகச்சிறந்த புலனாய்வு அமைப்பு உள்ளது என்றும் வருகை குழுவுக்கு எந்த விதமான பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என்றும் அவர் நியூசிலாந்து பிரதமரிடம் தெரிவித்தார்.
அதே போல நியூசிலாந்து பாதுகாப்பு அதிகாரிகளும் பாகிஸ்தான் அரசாங்கத்தால் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளில் திருப்தி அடைந்துள்ளனர். கிரிக்கெட் தொடரை நடத்தவே நாங்கள் விரும்புகிறோம், கடைசி நேரத்தில் தொடர் ரத்தானது பாகிஸ்தான் மற்றும் உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The security officials with the NZ team have been satisfied with security arrangements made by the Govt of Pakistan throughout their stay here. 3/4
— Pakistan Cricket (@TheRealPCB) September 17, 2021
PCB is willing to continue the scheduled matches. However, cricket lovers in Pakistan and around the world will be disappointed by this last minute withdrawal. 4/4
— Pakistan Cricket (@TheRealPCB) September 17, 2021