ஐபிஎல் தொடரில் விளையாட வந்து... ஒரு போட்டி கூட விளையாடத நட்சத்திர வீரருக்கு கொரோனா: நாடு திரும்ப முடியாத நிலை
ஐபிஎல் தொடரில் விளையாட வந்த நியூசிலாந்து வீரர் ஒரு போட்டி கூட விளையாடாத நிலையில், தற்போது அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், நாடு திரும்ப முடியாத பரிதாப நிலையில் உள்ளார்.
இந்தியாவில் இந்தாண்டு நடைபெற்று வந்த ஐபிஎல், கொரோனா பரவலுக்கிடையே மிகவும் பாதுகாப்பாகவே நடத்தப்பட்டு வந்தது.
இருப்பினும் முதலில் கொல்கத்தா வீரர் வருண் சக்ரவர்த்தி, அதன் பின் என அடுத்தடுத்து சில வீரர்களுக்கு கொரோனா பரவியதால், பாதுகாப்பு நலன் கருத்து, ஐபிஎல் தொடர் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், நியூசிலாந்து வீரரான டிம் சைபர்ட் தற்போது நியூசிலாந்து செல்ல முடியாத சூழ்நிலையில் உள்ளார். கொரோனாவிற்கான மிதமான அறிகுறிகளை மட்டுமே கொண்டிருந்த அவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அவர் தற்போது சென்னைக்கு அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கொல்கத்தா அணிக்காக அவர் ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தாலும் இதுவரை அவர் இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.