எங்களையா அசால்ட்டா நினைக்கிறீங்க... இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த நியூசிலாந்து: 22 வருட கிரிக்கெட் வரலாற்றை மாற்றி எழுதி சாதனை
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி, வெற்றி பெற்று 22 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னதாக, நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் போட்டி டிராவானதைத் தொடர்ந்து, இரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பிர்மிங்ஹாமில் நடைபெற்றது. அதன் படி முதலில் முதல் இன்னிங்ஸ் ஆடிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 303 ஓட்டங்கள் எடுத்தது.
இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக லாரன்ஸ் மற்றும் ராய் பர்ன்ஸ் ஆகியோர் தலா 81 ஓட்டங்கள் எடுத்தனர். இதையடுத்து முதல் இன்னிங்ஸ் ஆடிய நியூசிலாந்து அணி 388 ஓட்டங்கள் குவித்தது.
இதையடுத்து 85 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில், ஆடிய இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில், நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 122 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆனது.
நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக மேட் ஹென்ரி, வாக்னர் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர். 38 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற சொற்ப இலக்கை துரத்தி களமிறங்கிய நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்தாலும், அசால்டாக இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
கடந்த 1999-ஆம் ஆண்டிற்கு பின் நியூசிலாந்து அணி, இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை, இப்போது 1-0 என்று வென்று 22 ஆண்டுகால வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணிக்கு, இந்தியாவுக்கு ஒரு எச்சரிக்கையை கொடுத்துள்ளது என்று சொல்லலாம். ஏனெனில் இங்கிலாந்தில் தான் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.
இங்கிலாந்தையே நியூசிலாந்து வீழ்த்திவிட்டதால், இந்தியாவை எல்லாம் நியூசிலாந்து அசால்ட்டாக வீழ்த்தி டெஸ்ட் சாம்பியன் அந்தஸ்தை பெற்றுவிடும் என்று கணிக்கப்படுகிறது.
இந்த வெற்றியின் மூலம் கடந்த 1999-ஆம் ஆண்டிற்கு பிறகு நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியில் டெஸ்ட் தொடரை வென்று வரலாற்றையும் மாற்றி எழுதியுள்ளது.