உலக டெஸ்ட் சாம்பியன் ஆனது நியூசிலாந்து! இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி
இந்திய அணிக்கெதிரான உலக டெஸ் சாம்பியன் ஷிப் தொடருக்கான இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடருக்கான இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் மழையால் பாதிக்கப்பட்டால், ஆட்டம் ஆறு நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன் படி, இதில் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்க, இரண்டாம் நாள் ஆட்டமான நேற்று இந்திய அணி 217 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 101 ஓட்டங்கள் எடுத்தது.
அதன் பின் ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 249 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆனது.
அதைத் தொடர்ந்து 32 ஓட்டங்கள் பின்னிலையுடன் களமிறங்கிய இந்திய அணி, நேற்று மற்றும் இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில், 170 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து 140 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 140 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் கோப்பையை நியூசிலாந்து கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.