அடுத்த ஆண்டு இதே மும்பை அணியில்... ஐபிஎல் ஏலம் குறித்து பேசிய ரோகித்
மும்பை அணியின் கேப்டன் ஆன ரோகித்சர்மா, தன்னுடைய அணி குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இதையடுத்து, அடுத்த ஆண்டு இரண்டு புதிய அணிகள் வரவிருப்பதால், ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நடைபெறவுள்ளது. இதனால் ஒவ்வொரு அணியும் மூன்று வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதால், பல அணிகளில் இருந்து முக்கியமான வீரர்கள் நிச்சயமாக ஏலத்திற்கு வருவர்.
"All these players are not just made in one or two days... Its a lot of hard work that they have put in." 💥
— Mumbai Indians (@mipaltan) October 18, 2021
Ro talks about his journey with #MI and the special bond that he shares with this group 💙#OneFamily #MumbaiIndians #IPL2021 #KhelTakaTak @ImRo45 @MXTakaTak MI TV pic.twitter.com/rwYL2txiXi
அதில் முக்கியமாக ஒரு அணியாக மும்பை பார்க்கப்படுகிறது. ஏனெனில், மும்பை அணி தான் தலை சிறந்த ஐபிஎல் அணியாக உள்ளது. ஐந்து முறை ஐபிஎல் தொடர்பான கோப்பைகளை வென்றுள்ளது.
இதனால் மும்பை அணியை வீழ்த்துவது என்பது அவ்வளவு எளிதானது கிடையாது. ஆனால் இனி அந்த மும்பை அணி அப்படியே இருக்க வாய்ப்பில்லை, ஏலத்தில் நிச்சயமாக வீரர்கள் வேறு அணிக்கு எடுக்கப்படுவர்.
இது குறித்து மும்பை அணியின் தலைவரான ரோகித்சர்மா கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் ஒரு வலுவான அணியை வைத்திருக்க விரும்புகிறோம். ஆனால், இந்த முறை அப்படி இருக்க முடியாது என்று நம்புகிறேன்.
இப்போது இருக்கும் இந்த அணி இருக்க வாய்ப்பில்லை, சில அதிசயங்கள் நடக்கும் வரை, தங்கள் அணியில் இருக்கும் வீரர்கள் பலர் உலகின் தலைசிறந்த வீரர்களாக வளர்ந்து நிற்கின்றனர்.
இதனால், அடுத்த ஆண்டு இவர்கள் அனைவரும் ஒரே அணியில் இருப்பது என்பது மிகவும் கடினம், அதே சமயம் முக்கியமான சில வீரர்களை நாங்கள் பெறுவோம் என்று கூறியுள்ளார்.