வடக்கு அயர்லாந்து தேர்தல்: வரலாற்று வெற்றியை பதிவு செய்தது Sinn Féin கட்சி.
வடக்கு அயர்லாந்தில் நடைபெற்ற தேர்தலில் Sinn Féin கட்சி Democratic Unionist Party கட்சியை பின்னுக்கு தள்ளி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை கைப்பற்றியுள்ளது.
பிரித்தானிய அரசாங்கத்தின் ஆளுகைக்கு உட்பட்ட வடக்கு அயர்லாந்தில் கடந்த மே 5ம் திகதி தேர்தல் நடைப்பெற்றது, இதில் மிச்செல் ஓ'நீல் (Michelle O'Neill) மற்றும் மேரி லூ மெக்டொனால்ட் (Mary Lou McDonald) ஆகியோரின் தலைமையிலான Sinn Féin கட்சி மொத்தமுள்ள 90 இடங்களில் 27 இடங்களை கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவுசெய்துள்ளது.
இதனைத்தொடர்ந்து ஜெஃப்ரி டொனால்ட்சன் (Jeffrey Donaldson) தலைமையிலான Democratic Unionist Party மொத்தமுள்ள 90 இடங்களில் 25 இடங்களை கைப்பற்றி இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் முலம் மிச்செல் ஓ'நீல் வடக்கு அயர்லாந்தின் முதல் அமைச்சராக பதவியேற்கவுள்ளார். இந்த தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மிச்செல் ஓ'நீல், இந்த தேர்தல் உண்மையான மாற்றத்திற்கான தேர்தல் என்றும், இது எங்களது அரசியலுக்கும், எங்களது கட்சி உறுப்பினர்களையும் வரையறுக்கும் தருணம் என தெரிவித்திருந்தார்.
அடிப்படையான நியாயம், சமத்துவம் மற்றும் சமூகநீதி போன்றவற்றுடன் இணைந்த புதிய உறவுகளைகளுக்கான வாய்பை வழங்ககூடிய புதிய தசாப்தம் இன்று முதல் உருவாகப்போவதாக தெரிவித்திருந்தார்.
மேலும் எங்களது வேளை செயல்பாடுகள் பிரிவினைவாத அடிப்படை கொண்டது அல்ல, அனைவருடன் இணைந்த செயல்படும் அர்ப்பணிப்பு எனவும் Mid Ulster பகுதியில் மிச்செல் ஓ'நீல் தேர்வு செய்யப்பட்ட பிறகு தெரிவித்திருந்தார்.
cross-community Alliance Party கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுடன் ஓப்பிடுகையில் இருமடங்கு வெற்றியை பெற்று 17 இடங்களை கைப்பற்றியுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைன் மக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த ஜனாதிபதி ஜெலென்ஸ்கி: வெளியான காரணம்
மிச்செல் ஓ'நீல் மற்றும் மேரி லூ மெக்டொனால்ட் ஆகியோரின் தலைமையிலான Sinn Féin கட்சி வடக்கு அயர்லாந்தை பிரித்தானிய ஆளுகையில் இருந்து பிரித்து, குடியரசு அயர்லாந்துடன் இணைக்க வேண்டும் என தெரிவித்து இருந்தது குறிப்பிடதக்கது.