இரவு நேர ஊரடங்கை விலக்கிக்கொள்ளவேண்டும்: கோரிக்கையை நிராகரித்த ஜேர்மன் நீதிமன்றம்
இரவு நேர ஊரடங்கை விலக்கிக்கொள்ளவேண்டும் என்று கூறி தொடரப்பட்ட வழக்கில், ஊரடங்கு சரியானதுதான் என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது ஜேர்மன் அரசியல் சாசன நீதிமன்றம், ஜேர்மனியில், ஏப்ரல் 23 முதல் இரவு நேர ஊரடங்கு அமுலில் உள்ளது.
FDP கட்சி தொடர்ந்த வழக்கில், மக்களை வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்க மறுப்பது ஜேர்மனியின் அடிப்படை சட்டத்திஸ்கு முரணனாது என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
ஆனால், இரவு நேர ஊரடங்கை நிறுத்துவது, பொதுமக்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் அபாயத்தைத்தான் ஏற்படுத்தும் என்று கூறிய நீதிமன்றம், இரவு நேர ஊரடங்கு, மாலை நேரங்களில் மக்கள் கூடுவதை தடுக்க உதவும் என்றும் கூறியுள்ளது.
ஆகவே, இரவு நேர ஊரடங்கு சட்டப்படியானதுதான், அது மக்களின் உயிரையும், நலனையும் பாதுகாப்பதுடன், சுகாதார அமைப்பு முறைப்படி செயல்படவும் உதவுகிறது என்று கூறி தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம்.