இரவில் ஜொலிக்கும் டோக்கியோ நகரம்! நாசா வெளியிட்ட புகைப்படம்
இரவில் விளக்குகளால் ஜொலிக்கும் டோக்கியோ நகரத்தை நாசா புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளது.
டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடந்து வருகிறது, ஒவ்வொரு நாட்டை சேர்ந்த வீரர்களும் பதக்கங்களை வெல்ல போராடி வருகின்றனர்.
இந்நிலையில் இரவில் மின்னும் டோக்கியோ நகரத்தை நாசா அற்புதமாக புகைப்படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது.
இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வரும் நிலையில் விண்வெளி வீரர் கிம்பிரோ, வணக்கம் டோக்கியோ! பல நாடுகள் போட்டியில் வெற்றி பெற போராடினாலும் 250 மைல்களுக்கு தொலைவில் உள்ள நாங்களும் ஒரே அணியினர் தான் என்று பதிவிட்டுள்ளார்.