நைட் ஷிப்ட் வேலை செய்பவரா! ஜாக்கிரதையா இருங்க.. எந்த நேரத்திலும் இவை உங்களை தாக்கலாம்
ஒவ்வொரு மனிதருக்கும் இரவில் தூக்கம் என்பது முக்கியமான ஒன்று. சரியான நேரத்தில் தூங்கினால் மட்டுமே உங்களால் அடுத்த வேலையை பார்க்க முடியும். ஒரு நாள் தூக்கம் இல்லாமல் போனாலும் அது உங்களை சோர்வு அடைய செய்யும்.
ஆனால் மருத்துவர், காவலர், சாப்ட்வேர் போன்றவற்றில் பணி செய்பவர்கள் கண்டிப்பாக நைட் ஷிப்ட் செய்ய வேண்டிய சூழ்நிலையில் தள்ளப்படுகின்றனர். அவ்வாறு தூக்கத்தை தியாகம் செய்து வேலை பார்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா குறித்து பார்க்கலாம்.
நைட் ஷிப்ட் வேலை செய்பவர்களுக்கு மன இறுக்கம் அதிகரிக்கும். ஏனெனில் இரவு நேரத்தில் கிர்காடியன் அமைப்பின் இயற்கை செயல்பாட்டிற்கு இடையூறை உண்டாக்கும் வகையில் வேலை செய்வதால் மன இறுக்கம் அதிகரிக்கும்.
நைட் ஷிட் வேலை பார்ப்போரில் 50 சதவீதத்தினருக்கு சர்க்கரை நோயின் அபாயம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக 16 மணிநேரத்திற்கும் அதிகமாக வேலை செய்வோருக்கு சர்க்கரை நோயின் அபாயம் உள்ளது தெரிய வந்தது.
உடல் பருமனை அதிகரிக்க பல கரணங்கள் உண்டு. அதில் முக்கியமானது தூக்கமின்மை. இரவு நேரத்தில் அதிகமாக பசி எடுத்து கட்டுப்பாடு இல்லாமல் அதிகமாக உணவை உண்ண வைக்கும். இதன் விளைவாக உடல் பருமனாக வாய்ப்புண்டு.
நைட் ஷிப்ட் வேலை செய்பவர்களுக்கு இதய நோய்க்கான அதிக ஆபத்து இருந்தாலும் பக்கவாதம் அல்லது இதய செயலிழப்பு என்ற பிரச்சனைகளை ஏற்படுத்தவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.