இந்தியாவில் வங்கி மோசடி செய்துவிட்டு பிரித்தானியாவுக்கு தப்பிய வைர வியாபாரி நீரவ் மோடி: வழக்கில் முக்கிய திருப்பம்
இந்தியாவிலுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,570 கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு, அதை திருப்பிச் செலுத்தாமல், இந்தியாவிலிருந்து தப்பி ஓடி பிரித்தானியாவில் தஞ்சம் புகுந்த வைர வியாபாரி நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரித்தானிய உள்துறைச் செயலர் பிரீத்தி பட்டேல் ஒப்புதல் அளித்துள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடாக கடன் பெற்று அதைத்திருப்பித் தராமல் வெளிநாட்டுக்கு தப்பி ஓடியவர் வைர வியாபாரியான நீரவ் மோடி. இந்நிலையில், 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம், நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டார். அன்றிலிருந்து அவர் தற்போதுவரை லண்டன் சிறையில்தான் இருக்கிறார்.
அவரை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வந்தது. இந்தியாவில் தனக்கு போதிய பாதுகாப்பு இருக்காது என்றும், தன்னை சிறையில் அடைக்கும் சிறைச்சாலையில் போதிய வசதிகள் இல்லை என்றும் நீரவ் மோடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதாடினார்.
United Kingdom's Home Minister has approved the extradition of Nirav Modi: CBI official pic.twitter.com/cdqLHDYM92
— ANI (@ANI) April 16, 2021
இதனால் ஏறக்குறைய கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று இந்த வழக்கு விசாரணை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்தியாவில் நீரவ் மோடி அடைக்கப்பட உள்ள ஆர்தர் சாலை சிறைச்சாலை குறித்த வீடியோ காட்சிகளை லண்டன் நீதிமன்றத்தில் இந்திய அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.
இந்திய தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, நீரவ் மோடியை இந்தியாவுக்கு அனுப்ப தடையில்லை என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். தீர்ப்பைத் தொடர்ந்து நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு பிரித்தானிய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கிடையில், தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய நீரவ் மோடிக்கு 14 நாள்
அவகாசம் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.