பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்படுவதை எதிர்த்து மீண்டும் மேல்முறையீடு செய்ய நீரவ் மோடி முயற்சி
இந்தியாவில், பஞ்சாப் நேஷனல் வங்கியில் 2பில்லியன் டொலர்கள் கடன் மோசடி செய்துவிட்டு பிரித்தானியாவுக்குத் தப்பியோடி, தற்போது லண்டனில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வைர வியாபாரியான நீரவ் மோடி, நாடு கடத்தப்படுவதற்கு எதிராக செய்த மேல்முறையீட்டு மனுவை லண்டன் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அவரை இந்தியாவுக்கு நாடுகடத்த உத்தரவிட்டது நியாயமானதே என லண்டன் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாடுகடத்தப்படுவதை எதிர்த்து மீண்டும் மேல்முறையீடு செய்ய நீரவ் மோடி முயற்சி
இந்நிலையில், தான் பிரித்தானியாவிலிருந்து இந்தியாவுக்கு நாடுகடத்தப்படுவதை எதிர்த்து மீண்டும் மேல்முறையீடு செய்ய நீரவ் மோடி முயற்சி செய்துவருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
தற்கொலை செய்துகொள்ளும் அபாயம் இருப்பதாக கூறியிருந்த மோடி
நீரவ் மோடி தனது மனநிலை காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் அபாயம் இருப்பதைக் காரணமாகக் காட்டி, இந்தியாவில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் பண மோசடி வழக்குகளையும் எதிர்கொள்வதிலிருந்து தப்பிக்க நினைப்பது நியாயமாகாது என்றும் நீதிபதிகள்கூறிவிட்டார்கள்.
ஆகவே, அவர் விரைவில் நாடுகடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தான் நாடுகடத்தப்படுவதை எதிர்த்து மீண்டும் மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி லண்டன் நீதிமன்றத்தில் விண்ணப்பம் ஒன்றை அளித்துள்ளார் மோடி.
இந்நிலையில், இந்தியாவில் பல்லாயிரம் கோடி மோசடி செய்துவிட்டு லண்டனில் அவர் சுதந்திரமாக நடமாடுவதைக் கண்ட பத்திரிகையாளர் ஒருவர் அவரை மடக்கி சரமாரியாக கேள்வி எழுப்பும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
ஆனால், அவரது அனைத்துக் கேள்விகளுக்கும் மோடி அளித்த ஒரே பதில், ’Sorry, no comments’ என்பதுதான்!
Exclusive: Telegraph journalists tracked down Nirav Modi, the billionaire diamond tycoon who is a suspect for the biggest banking fraud in India's historyhttps://t.co/PpsjGeFEsy pic.twitter.com/v3dN5NotzQ
— The Telegraph (@Telegraph) March 8, 2019