இரு சக்கர வாகனங்களுக்கு சுங்க கட்டணமா? நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் விளக்கம்
இரு சக்கர வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க உள்ளதாக வெளியான தகவலுக்கு அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் கார் லாரி உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களிடம் மத்திய அரசு FASTag முறை மூலம் சுங்க கட்டணம் வசூலிக்கிறது.
இரு சக்கர வாகனங்களுக்கு சுங்க கட்டணமா?
சமீபத்தில், வணிக நோக்கமற்ற வாகனங்களுக்கு ரூ.3,000 மதிப்பிலான வருடாந்திர பாஸ் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
குறைந்த செலவில் பயணம் மற்றும் சுங்கச்சாவடிகளில் வரிசையில் நிற்கும் நேரத்தை குறைக்கும் வகையில், மத்திய அரசு இந்த பாஸை அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில், இந்திய நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்களுக்கான கட்டணமில்லா பயணம் முடிவுக்கு வரக்கூடும் என்றும், ஜூலை 15 முதல் சுங்கசாவடிகளில் இரு சக்கர வாகன ஓட்டிகளும் சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டும் என இணையத்தில் தகவல்கள் பரவியது.
இந்த தகவலுக்கு, மத்திய நெடுஞ்சாலைத்துறை மற்றும் சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சில செய்தி நிறுவனங்கள் இருசக்கர வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க உள்ளதாக தவறான தகவலை வெளியிட்டுள்ளன.
📢 महत्वपूर्ण
— Nitin Gadkari (@nitin_gadkari) June 26, 2025
कुछ मीडिया हाऊसेस द्वारा दो-पहिया (Two wheeler) वाहनों पर टोल टैक्स लगाए जाने की भ्रामक खबरें फैलाई जा रही है। ऐसा कोई निर्णय प्रस्तावित नहीं हैं। दो-पहिया वाहन के टोल पर पूरी तरह से छूट जारी रहेगी। बिना सच्चाई जाने भ्रामक खबरें फैलाकर सनसनी निर्माण करना स्वस्थ…
அப்படி எந்த முடிவும் முன்மொழியப்படவில்லை. இரு சக்கர வாகனங்களுக்கான சுங்க வரி விலக்கு முழுமையாக தொடரும்." என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |