இந்தியர்களே தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள்: தமிழ் நடிகை நிவேதா பெத்துராஜ்
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருங்கள் என நடிகை நிவேதா பெத்துராஜ் கூறியுள்ளார்.
பதிலடி தாக்குதல்
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா அணுசக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள் ஆகியவற்றை குறிவைத்து அதிரடி தாக்குதலை நடத்தின.
அதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதில் குவைத், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஓமன், ஜோர்டான் ஆகிய நாடுகள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
இந்தியாவில் கலக்கம்
மத்திய கிழக்கு நாடுகளில் பல்வேறு தேசத்து மக்கள் வேலைக்காக தங்கியிருப்பதால் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் என பலரும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இந்தியர்கள் பத்திரமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

அந்த வகையில் நடிகை நிவேதா பெத்துராஜும் கவலை தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "சக இந்தியர்களே, தயவுசெய்து ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் பாதுகாப்பாக இருங்கள். கடவுளே!!! எதுவும் மோசமடையாமல் இருக்கட்டும்" என கூறியுள்ளார்.
Fellow Indians, please stay safe in the UAE and across the Middle East. Hopefully nothing escalates. God!!!
— Nivetha Pethuraj (@Nivetha_Tweets) February 28, 2026

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |