பிரான்ஸ் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்
ஓய்வூதியம் தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து, பிரான்சின் Socialist கட்சியினர் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளார்கள்.
பிரான்ஸ் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்
ஓய்வூதியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால், பிரான்ஸ் பிரதமர் Francois Bayrou, Socialist கட்சியால் மற்றொரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள நேரிடும் என சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தீவிர வலதுசாரி கட்சியான National Rally கட்சி இந்த தீர்மானத்தை ஆதரிக்கப் போவதில்லை என்று கூறியிருந்தாலும், இந்த நடவடிக்கை ஏற்கனவே வலிமையற்று காணப்படும் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானின் அரசை மேலும் பலவீனப்படுத்துவதாக கருதப்படுகிறது.
ஓய்வூதிய அமைப்பில் சீர்திருத்தங்கள் கொண்டுவருவது தொடர்பாக பிரான்ஸ் தொழிற்சங்கங்களுக்கும் பணி வழங்குவோருக்கும் இடையே பல மாதங்களாக நடந்து வந்த பேச்சுவார்த்தைகள் திங்கட்கிழமை தோல்வியில் முடிந்தன.
ஆகவே, ஓய்வூதிய வயதை மீண்டும் குறைப்பது உட்பட சீர்திருத்தத்தில் மாற்றங்களை முன்மொழிய நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுமதிக்க வேண்டும் என்று Socialist கட்சியினர் கோரினர்.
ஆனால் பிரதமர் அதற்கு சம்மதம் தெரிவிக்க மறுத்துவிட்டார், மாறாக பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றவர்கள் உடன்பாட்டை எட்டுவதற்காக தனிப்பட்ட முறையில் முயற்சி மேற்கொண்டார் அவர்.
ஆக, பிரதமரின் முயற்சியும் தோல்வியடைந்துள்ளதைத் தொடர்ந்து, Socialist கட்சியினர் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளார்கள்.
Socialist கட்சி, ஒத்த கருத்துக்கள் கொண்ட மற்ற கட்சிகளுடன் இணைந்து நம்பிக்கையில்லாத் தீரமானத்துக்கு ஆதரவளித்தால், பிரதமரின் ஆட்சி கவிழவும் வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |