இந்தியாவுக்கு எங்களால் கொடுத்து உதவ முடியாது! கைவிட்ட பிரித்தானியா: போரிஸ் ஜோன்சன் முக்கிய தகவல்
பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன், இந்தியாவிற்கு கொடுக்கும் அளவிற்கு எங்களிடம் உபரி கொரோனா தடுப்பு மருந்து இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக உலகநாடுகளின் உதவியை இந்தியா நாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதன் படி அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், பாகிஸ்தான் போன்ற நாடுகள் தங்களால் இயன்ற உதவியை செய்வோம் என்று கூறியிருந்தது.
அதன் படி உலகநாடுகள் இந்தியாவிற்கு முடிந்த அளவிற்கு தேவையான உதவிகளை செய்து வரும் நிலையில், பிரித்தானியா தற்போது தங்களின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுப்படுத்தியுள்ளது.
இது குறித்து பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் கூறுகையில், பிரித்தானியாவில் தற்போது உபரி தடுப்பூசி இல்லை என்பதால் இந்தியாவிற்கு அளிக்கவில்லை.
இப்போது எங்களிடம் இருக்கும் கொரோனா தடுப்பு மருந்துகள், தங்கள் மக்களுக்கு அளிக்கப் பயன்படுத்தப் போதுமானதாக இருக்கும் என கூறியுள்ளார். மேலும், பிப்ரவரி மாதம் பிரித்தானியாவில் கூடுதலாக இருக்கும் கொரோனா தடுப்பு மருந்தை, தேவைப்படும் நாடுகளுக்கு அளிக்க உறுதி அளித்திருந்தோம்.
ஆனால் தற்போது நாட்டுக் குடிமக்களுக்குத் தடுப்பு மருந்து அளிக்க வேண்டியது மிக முக்கியமானதாக மாறியுள்ள நிலையில் உபரியாக வேக்சின் தற்போது பிரித்தானியாவில் இல்லை என்று பிரதமர் போரிஸ் ஜோன்சனின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.