6 முதல் 7வயது வரை.. குழந்தைகளுக்கு தேர்வு கிடையாது! சீனா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
சீனாவில் 6 முதல் 7வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தேர்வு அவசியமில்லை என்று சீன அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சிறு வயதிலே பாட சுமைகளால் குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது.
இதனால் அவர்களது உடல்நிலை கடுமையாக பாதிக்ககூடும். இதை கருத்தில் கொண்டு சீன அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதாவது 6 முதல் 7வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பள்ளியில் தேர்வுகள் நடத்துவதை தடை செய்துள்ளது.
இது குறித்து அந்நாட்டு கல்வி அமைச்சகம் கூறியது, கல்வி என்பது வாழ்க்கையில் ஒரு பாகம் மட்டுமே. ஆனால் உடல் ஆரோக்கியம் வாழ்க்கை முழுவதும் நம்மை தொடர வேண்டும்.
இதனால் குழந்தைகளுக்கு மன அழுத்தம் கொடுக்கும் எந்த ஒரு செயலும் இருக்க கூடாது என்ற எண்ணத்தில் அவர்களுக்கு தேர்வை ரத்து செய்துள்ளோம் என்று தெரிவித்தனர். சில பள்ளிகளில் அதிகபடியான தேர்வுகளை நடத்தி மாணவர்களுக்கு பெருத்த சுமையை கொடுக்கின்றன.
இவை விரைவில் சரி செய்யப்படும். அடுத்ததாக சீனாவில் தொடக்க நிலை வகுப்புகளுக்கு வீட்டுபாடம் கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. அது போல் ஆரம்ப நிலை வகுப்பு மாணவர்களுக்கும் வீட்டு பாடம் கொடுப்பதில் பரிசீலினை செய்யப்படும் என்று உத்தரவிட்டுள்ளது.