நாடு திரும்ப முடியாமல் பிரபல ஐரோப்பிய நாட்டில் சிக்கி தவிக்கும் பிரித்தானியர்கள்! பிரிட்டிஷ் ஏர்வேஸ் முக்கிய அறிவிப்பு
பிரபல ஐரோப்பிய நாடான போர்ச்சுகலில் இருந்து பிரித்தானியா திரும்ப முடியாமல் தவிக்கும் பயணிகளுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த வாரம் புதுப்பிக்கப்பட்ட பயண பட்டியலை பிரித்தானியா வெளியிட்டது. பச்சை பட்டியலில் புதிததாக எந்த நாடும் சேர்க்கப்படவில்லை.
அதில், இலங்கை உட்பட 7 நாடுகள் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டது. பச்சை பட்டியலிருந்து நீக்கப்பட்ட போர்ச்சுகல் அம்பர் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
இதனால் பிரித்தானியர்கள் யாரும் இனி போர்ச்சுகல் பயணிக்க வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே போல் போர்ச்சுகலில் இருந்து நாடு திரும்பும் பயணிகள், 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
இந்த விதிகள் ஜூன் 8ம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது. இதனால், இன்று இரவுக்குள் போர்ச்சுகலில் இருந்து நாடு திரும்ப பிரித்தானியர்கள் முந்தியடித்ததால், போர்ச்சுகல் விமான நிலையங்களில் பரபரப்பு நிலவியது.
அதேசமயம், பிரித்தானியா திரும்பும் விமானங்களில் குறைவான இருக்கைகளே இன்னும் காலியாக உள்ளது.
இந்நிலையில், போர்ச்சுகலில் இருந்து பிரித்தானியா பயணிப்பதற்காக பயணிகள் தங்கள் விமானத்தை மாற்றிக்கொண்டால் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது என பிரிட்டிஷ் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.
ரிட்டர்ன் டிக்கெட் அதன் இணையதளத்தில் முதலில் செலுத்தப்பட்ட விலையை விட விலை உயர்ந்ததாக இருந்தால், வாடிக்கையாளர் முதலில் செலுத்திய கட்டணம் ஏற்றுக்கொள்ளப்படும் என்று விமான நிறுவனம் கூறியுள்ளது.