ரகானேவை இந்திய அணியிலிருந்து நீக்குவதால் எந்த பாதிப்பும் இருக்காது! தினேஷ் கார்த்திக்
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனிலிருந்த ரகானேவை நீக்குவதால் இந்திய அணிக்கு எந்த பாதிப்பும் இருக்காது என இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டனாக செயல்பட்ட ரகானே, முதல் இன்னிங்கஸில் 35 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 4 ரன் எடுத்தார்.
ரகானேவின் மோசமான ஆட்டம் ரசிர்களிடையே கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்தியா-நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், இரு அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 3ம் திகதி மும்பையில் தொடங்கவிருக்கிறது.
இந்நிலையில், 2வது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனிலிருந்து ரகானேவை ஓரங்கட்டினால் இந்திய அணிக்கு எந்த பாதிப்பும் இருக்காது என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
கார்த்திக் கூறியதாவது, ரகானே நீண்ட காலமாக ஃபார்மில் இல்லை, பிளேயிங் லெவனிலிருந்து ஓரங்கட்டுவது அவருக்கு ஒரு நெருடலாக இருக்காது.
ஸ்ரேயாஸ் ஐயர் அற்புதமாக விளையாடுவதால், ரகானே மீது தான் அழுத்தம் அதிகரிக்கும், பிளேயிங் லெவனிலிருந்து ரகானே ஓரங்கட்டப்படலாம்.
இதற்கு முன்பு தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது இவ்வாறு நடந்துள்ளது. ரகானே ஒரு போட்டியில் ஓரங்கட்டப்பட்டார்.
ஒரு போட்டியில் ரகானேவை நீக்குவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்ரோயஸ் ஐயர் ஒற்றை ஆளாக இந்தியாவை காப்பாற்றினார். அவர் சிறப்பாக விளையாடினார்.
ரகானே 1-2 டெஸ்ட் போட்டிகளில் ரன்கள் அடிக்காமல் இருந்திருந்தால் பரவயில்லை, அவர் நீண்ட காலமாக மோசமாக விளையாடி வருகிறார்.
ரகானேவை நீக்குவது மோசமானதாக நான் கருதவில்லை. அது மீது இருக்கும் அழுத்தத்தை சற்று குறைக்கும் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.