தலைவலியே வராமல் இருக்கனுமா? இந்த டீயை மறக்கமால் குடித்தாலே போதுமாம்!
பொதுவாக இன்றைய காலத்தில் பலரும் சந்திக்கும் ஒரு பிரச்சினை தான் தலைவலி.
அதிகம் டென்ஷன் தரும் வேலைகளில் உள்ளவர்கள், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், தீராத தலைவலியால் அவதிப்படுபவர்கள்.
இதிலிருந்து உடனடியாக நிவாரணம் பெற ஒரு கப் லெமன் டீ அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும். லெமன் டீயில் நரம்பு மண்டலங்கள் சாந்தமடைய செய்யும் ஆற்றல் உள்ளது.
மேலும் இது மூளை நரம்புகளையும் வலுவாக்கி, சுறுசுறுப்பாக வைத்துக் கொள்கிறது. இதனால் எப்பொழுதும் உற்சாகத்துடன் காணப்படலாம்.
தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் முதலில் ஒரு கப் டீ பருகினால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். தற்போது இந்த டீயை எப்படி தயாரிக்கலாம் என்று பார்ப்போம்.
Image - hopkinsmedicine
டீ தயாரிக்க தேவையான பொருட்கள்
- தண்ணீர் – ரெண்டு கப்
- டீ தூள் – அரை ஸ்பூன்
- சர்க்கரை அல்லது தேன் – ரெண்டு டீஸ்பூன்
- எலுமிச்சை பழச்சாறு – இரண்டு டீஸ்பூன்
செய்முறை
- ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு பேர் சாப்பிட வேண்டுமென்றால் 2 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். நீங்கள் எத்தனை பேருக்கு தயாரிக்கிறீர்களோ! அதை பொறுத்து தண்ணீரை கூட்டிக் கொள்ளுங்கள்.
- அரை டீஸ்பூன் அளவிற்கு உங்களிடம் இருக்கும் டீ தூள் எதுவாக இருந்தாலும் அதை போட்டுக் கொள்ளுங்கள். தண்ணீர் நன்கு கொதித்து வரும் சமயத்தில் உங்களிடம் கருப்பட்டி, நாட்டு சர்க்கரை, பனங்கற்கண்டு போன்றவை இருந்தால் அதனை சேர்த்து கரைய விடுங்கள். அதன் பிறகு இறுதியாக எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கி பருக வேண்டியது தான்.
- அப்படி எதுவும் இல்லை என்றால் மேற்கூறியபடி சர்க்கரை அல்லது தேன் கலந்து கொள்ளலாம். சர்க்கரை அல்லது தேன் கலந்து கொள்ளும் பொழுது தண்ணீர் கொதித்ததும் எலுமிச்சைச்சாறு சேர்த்து பின்னர் சர்க்கரை அல்லது தேன் கலந்து அடுப்பை அணைத்து விடலாம்.
- அதன் பிறகு வடிகட்டி அப்படியே சூடாக குடிக்க வேண்டியது தான். அதில் இஞ்சி சாரு கொஞ்சமும், ஒன்றிரண்டு புதினா இலைகளையும் போட்டால் இன்னும் சூப்பராக இருக்கும்.