பிரித்தானியாவில் அமுலுக்கு வரும் புதிய விதி.. பிரான்ஸுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு நீக்கம்!
நாட்டிற்கு வருகை தரும் பயணிகள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் தொடர்பான பயண பட்டியலை பிரித்தானியா அரசாங்கம் புதுப்பித்துள்ளது.
புதிய பயண விதிகளை பிரித்தானியா போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் வெளியிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 8ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி முதல் புதிய விதிகள் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, பிரான்ஸிலிருந்து பிரித்தானியா வரும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட பயணிகள் இனி தனிமைப்படுத்த தேவையில்லை.
அதேசமயம், ஜேர்மனி, ஆஸ்திரியா மற்றும் நோர்வே ஆகியவை பச்சை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் சிவப்பு பட்டியலிருந்து நீக்கப்பட்டு அம்பர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
மில்லியன் கணக்கான பிரித்தானியர்கள் சுற்றுலா சென்றுள்ள ஸ்பெயின் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், இதுகுறித்து கிராண்ட் ஷாப்ஸ் விளக்கமளித்துள்ளார்.
We're making some changes to our travel lists🚦
— Rt Hon Grant Shapps MP (@grantshapps) August 4, 2021
Firstly, we’re removing the quarantine requirement for fully jabbed travellers coming back from #France.
At the same time, we’re adding key destinations ☀️ Germany, Austria, and Norway to the Green List 🟢[1/
ஸ்பெயின் தொடர்ந்து அம்பர் பட்டியிலில் தான் இருக்கும், எனினும் ஸ்பெயினிலிருந்து நாடு திரும்பும் பயணிகள், புறப்படுவதற்கு முன் பிசிஆர் சோதனை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.