கொரோனா பாதிப்பு குறித்து யாரும் வதந்தி பரப்ப வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து யாரும் வதந்தி பரப்ப வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
அமைச்சர் பேசியது
கொரோனா பாதிப்பு குறித்து காதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசுகையில், "கடந்த 2019-ம் ஆண்டில் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
தற்போது, பல பெயர்களில் கொரோனா உருமாறி உலா வருகிறது. தற்போது இந்தியாவில் பரவும் கொரோனாவானது வீரியம் இல்லாதது. இதற்காக முகக்கவசம் போன்றவற்றை அணிய வேண்டும் என்று இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இணை நோய் இருப்பவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் முகக்கவசம் அணிந்து செல்வது நல்லது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து யாரும் வதந்தி பரப்ப வேண்டாம். போதுமான அளவு மருந்துகள் இருப்பில் உள்ளன.
வீரியம் குறைந்த பாதிப்பு தான் என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. 2, 3 நாள் இருமல், காய்ச்சல், சளி என்பதுடன் பாதிப்பு சரியாகி விடும். மக்கள் அச்சப்பட வேண்டாம்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |