அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய விமான பயணிகளுக்கு புதிய சலுகை அறிவித்த பிரித்தானியா
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் சுய-தனிமைப்படுத்தப்படாமல் பிரித்தானியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட உள்ளனர்.
உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை 4 மணிக்கு நடைமுறைக்கு வரும் இந்த மாற்றத்தால் அன்புக்குரியவர்கள் வெளிநாட்டில் வசிக்கும் குடும்பத்தினரையும் நண்பர்களையும் மீண்டும் ஒன்றிணைக்க உதவும் என்று அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, பிரித்தானியாவில் தடுப்பூசி பெற்றவர்கள் மட்டுமே ஜூலை 19 முதல், அம்பர் நாடுகளிலிருந்து வரும்போது தனிமைப்படுத்தலைத் தவிர்க்க முடியும்.
ஆனால், பிரித்தானியாவுக்கு வெளியே தடுப்பூசி போட்டுக்கொண்டு, நாட்டுக்குள் நுழைய விரும்பும் மக்களுக்கு அதே உரிமைகள் வழங்கப்படவில்லை.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய மக்கள் விமான பயணத்திற்கு முன்னர் கொரோனா சோதனை முன்னெடுக்க வேண்டும் என்பதுடன், பிரித்தானியாவுக்குள் நுழைந்த பின்னர் இரண்டாவது நாள் PCR சோதனையும் முன்னெடுக்கப்பட வேண்டும்.
தற்போது முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், எந்த சிக்கலும் இன்றி பிரித்தானியாவில் நுழைய முடியும். அமரிக்க பயணிகளுக்கு பிரித்தானியா சலுகை அறிவித்திருந்தாலும், பிரித்தானியாவுக்கு தற்போதைய சூழலில் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அமெரிக்கர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, அமெரிக்க எல்லைகள் தற்போது இங்கிலாந்துக்கும், அமெரிக்க குடிமக்கள் தவிர பல நாடுகளுக்கும் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.