அய்யோ சாமி எனக்கு அது வேண்டாம்! அடுத்த ஐபிஎல் குறித்து நறுக் பதில் அளித்த வார்னர்
அவுஸ்திரேலியா அணியின் துவக்க வீரரான டேவிட் வார்னர், அடுத்த ஐபிஎல் தொடர் குறித்து ஒரு தெளிவான பதில் கொடுத்துள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர், இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இறுதியாக சென்னை அணி கோப்பையை வென்றது.
இந்த முறை ஐபிஎல் தொடரில் வார்னர் அந்தளவிற்கு விளையாடாத காரணத்தினால், அவரை கேப்டன் பதவியில் மட்டுமின்றி, அவரை அணியில் இருந்தே அணி நிர்வாகம் ஒதுக்கியதாக கூறப்பட்டது.
அதற்கெல்லாம் பதில் அளிக்கும் வகையில், வார்னர் அதே ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை டி20 தொடரில் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி, அசத்தினார்.
இதனால், இவரை ஹைதராபாத் அணி மீண்டும் தக்க வைக்கும் என்ற பேச்சு எழுந்து வருகிறது. இதற்கிடையில் பிரபல ஊடகம் ஒன்று சமூகவலைத்தள பக்கத்தில், ஹைதராபாத் அணி Tom Moody-ஐ மீண்டும் பயிற்சியாளர் ஆக்க முயற்சித்து வருவதாக குறிப்பிட்டிருந்தது.
இதைக் கண்ட ரசிகர் ஒருவர், அடுத்த முறை Tom Moody பயிற்சியாளர், டேவிட் வார்னர் கேப்டன் என்று குறிப்பிட்டிருந்தார். உடனே வார்னர் நோ தாங்ஸ்(No thanks) என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் வார்னர் நான் இனி ஹைதரபாத் பக்கம் வரமாட்டேன், கேப்டனும் ஆகமாட்டேன் என்பதையே வார்னர் இப்படி மறைமுகமாக குறிப்பிட்டிருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.