பிரித்தானிய மகாராணியாருக்கே பணத்தட்டுப்பாடாம்: காரணம் என்ன தெரியுமா?
பிரித்தானிய மகாராணியாருக்கே பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பக்கிங்காம் அரண்மனை வட்டாரம் நேற்று தெரிவித்துள்ளது. 2019/20இல் 20.2 மில்லியன் பவுண்டுகளாக இருந்த மகாராணியாரின் வருமானம், 2020/21இல் 9.4 மில்லியன் பவுண்டுகளாக குறைந்துவிட்டதாம்.
இந்த பணத்தட்டுப்பாட்டுக்கு காரணம் கொரோனாதான். அதாவது, கொரோனா காரணமாக அரண்மனையை சுற்றிப் பார்க்க வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது.
ஆக, கொரோனாவால் சாதாரண மக்களுக்குத்தான் பணப்பிரச்சினை என்று இல்லை, மகாராணியாருக்கே பிரச்சினைதான். சுமார் 10 மில்லியன் பவுண்டுகள் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து, வேறு வழியில்லாமல், சேமிப்பிலிருந்து எடுத்து செலவு செய்யவேண்டிய நிலைமை ராஜ அரண்மனைக்கே வந்துவிட்டதாம்!