வரிகளுக்குத் தப்புவதற்காக சுவிட்சர்லாந்துக்கு குடிபெயரும் வெளிநாடொன்றின் செல்வந்தர்கள்
தங்கள் நாட்டில் அதிக வரி செலுத்தவேண்டியுள்ளதால், அதற்குத் தப்புவதற்காக சுவிட்சர்லாந்துக்கு குடிபெயர்ந்துவருகிறார்கள் ஒரு நாட்டின் செல்வந்தர்கள்.
செல்வந்தர்களுக்கு அதிக வரி விதிக்க முடிவு செய்த நாடு
நார்வே நாடு, கடந்த ஆண்டு, செல்வந்தர்களுக்கு விதிக்கப்படும் சொத்து வரியை அதிகரிக்க முடிவு செய்தது. கடந்த நவம்பரில், 0.85 சதவிகிதமாக இருந்த வரியை 1.1 சதவிகிதமாக உயர்த்தியது நார்வே அரசு.
அதைத் தொடர்ந்து, அந்நாட்டிலுள்ள செல்வந்தர்களில் சுமார் 65 பேர், நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்தனர்.
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, அங்கு சொத்து வரி, 0.02 சதவிகிதம் முதல் 1.03 சதவிகிதம் வரைதான் விதிக்கப்படுகிறது. ஆகவே, நார்வே செல்வந்தர்கள் சுவிட்சர்லாந்துக்கு குடிபெயர்ந்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |