அண்ணாமலையிடம் ரூ.50 கோடி மான நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ்
தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலையிடம் ரூ.50 கோடி மான நஷ்டஈடு கேட்டு பல்கலை. முன்னாள் பி.ஆர்.ஓ நடராஜன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அண்ணாமலைக்கு நோட்டீஸ்
அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் திமுக நிர்வாகி கோட்டூர்புரம் சண்முகம் என்பவர் முன்னாள் பிஆர்ஓ நடராஜனின் நண்பர் என்று அண்ணாமலை குறிப்பிட்டிருந்தார்.
இவரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த ல்கலை. முன்னாள் பி.ஆர்.ஓ நடராஜன் ரூ.50 கோடி மான நஷ்டஈடு கேட்டு அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில் அவர், "அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை சம்பவத்தில் தன்னை தொடர்புப்படுத்திய மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சமூக வலைதளத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும்.
தவறும்பட்சத்தில் அண்ணாமலைக்கு எதிராக மான நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடரப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |