லண்டன் நாட்டிங் ஹில் கார்னிவல் அசம்பாவிதம்... ஆபத்தான நிலையில் மூவர்
நாட்டிங் ஹில் கார்னிவல் முடிவடையும் நாளில் ஐவர் கத்தியால் தாக்கப்பட்டுள்ளதாக பெருநகர பொலிசார தெரிவித்துள்ளனர்.
திரளான பொலிசார்
ஞாயிறன்று மூவர் தாக்குதலுக்கு இரையாகியுள்ளனர். திங்களன்று தாக்குதலுக்கு இரையானவர்களில் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், ஞாயிறன்று தாக்குதலுக்கு இலக்கான 32 வயது பெண் ஒருவரும் ஆபத்தான நிலையில் உள்ளார் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 மில்லியன் மக்கள் நாட்டிங் ஹில் கார்னிவலில் கலந்துகொள்கின்றனர். மேலும், அதிக எண்ணிக்கையிலான மக்கள் கலந்துகொள்வதால் அசம்பாவிதம் நடப்பதும் அரிது என கூறுகின்றனர்.
ஆனால் ஞாயிறன்று மூவர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்த, திரளான பொலிசார் குவிக்கப்பட்டனர். மட்டுமின்றி, கத்தி போன்ற ஆயுதங்கள் வைத்திருப்பதை கண்டறிய சிறப்பு சோதனைகளும் முன்னெடுக்கப்பட்டது.
விழா நடக்கும் தெருவெங்கும் பொலிசார் குழுக்களாக காணப்பட்டனர். மேலும் நாள் முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஹெலிகொப்டரும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தேடப்பட்டு வந்த நபர்
இதனிடையே, கடந்த ஜூலை மாதம் Hackney பகுதியில் நடந்த கொலை முயற்சி தொடர்பில் பொலிசாரால் தேடப்பட்டு வந்த நபர் திங்களன்று நாட்டிங் ஹில் கார்னிவல் பகுதியில் சிக்கியுள்ளார்.
Harrow பகுதியில் கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்ததில், துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மதியத்திற்கு மேல், கார்னிவல் நுழைவு வாயில் ஒன்றில் சோதனை முன்னெடுத்த பொலிசார், துப்பாக்கிகளை கைப்பற்றியுள்ளனர்.
திங்களன்று கரீபியன் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை கொண்டாடும் நாள் என்பதால், ஆயிரக்கணக்கானோர் விசித்திரமான ஆடை அலங்காரங்களுடன் விழாவில் கலந்துகொண்டுள்ளனர்.
கடந்த 50 ஆண்டுகளாக நாட்டிங் ஹில் கார்னிவல் முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |