அடுத்த மூன்று தினங்களுக்கு... நாம் தமிழர் கட்சி தலைமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன் அவர்களின் மறைவையொட்டி கட்சியினருக்கு தலைமை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும், கடலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான கடல்தீபன் உயிரிழந்த சம்பவம் அக்கட்சியின் தலைவர் சீமான் உள்ளிட்ட கட்சித் தொண்டர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
உடல் நல பிரச்சனையால் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கடல் தீபன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடல் தீபன் மறைவையொட்டி நாம் தமிழர் கட்சி தலைமை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன் அவர்களின் மறைவையொட்டி துக்கம் கடைபிடிக்கும் விதமாக நாம் தமிழர் கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளும் அடுத்த மூன்று தினங்களுக்கு ரத்து செய்யப்படுகின்றன.
முக்கிய அறிவிப்பு:
— நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi (@NaamTamilarOrg) August 9, 2021
மாநில ஒருங்கிணைப்பாளர் கடல்தீபன் அவர்களின் மறைவையொட்டி நாம் தமிழர் கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளும் அடுத்த மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுகின்றன. கட்சிக் கொடியினை அரைக் கம்பத்தில் இறக்கி வைத்து துக்கம் கடைப்பிடிக்க வேண்டுமென உறவுகளைக் கேட்டுக்கொள்கிறோம். pic.twitter.com/bOze079xyM
நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் கட்சியின் கொடிகளை அடுத்த மூன்று தினங்களுக்கு அரை கம்பத்தில் இறக்கி வைத்து துக்கம் கடைபிடிக்க வேண்டும் என தலைமை அறிவித்துள்ளது.