கல்லறைக்கு அருகில் எலும்புக்கூடுவுடன் ஆடிய பெண் கன்னியாஸ்திரி! திகிலை ஏற்படுத்தியுள்ள சம்பவம்
கல்லறைக்கு அருகில் எலும்புக் கூடுவுடன் கன்னியாஸ்திரி ஒருவர் நடனம் ஆடுவது போன்ற புகைப்படம் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
இங்கிலாந்தில் இருக்கும் Hull General கல்லறையில், கடந்த சனிக்கிழமை கன்னியாஸ்திரி உடையணிந்த பெண் ஒருவர், நாய் போல் தோற்றமளிக்கும் எலும்புக்கூடு மற்றும் மனித உடல் போன்ற எலுக்புக் கூடுவை தூக்கிப் பிடித்து ஆடுவது போன்று இருந்தது.
இது குறித்து அதைக் கண்ட அங்கிருந்த ஒருவர் கூறுகையில், உண்மையில் Hull General கல்லறைக்கு அருகில் அந்த பெண் நின்றிருந்தாள். அவள் எலும்ப்புக்கூடுவுடன் நடனமாடிக் கொண்டிருந்தாள்.
கார்களில் சென்ற மக்கள் பலரின் கவனத்தை இது ஈர்த்துள்ளது. இந்த சம்பவம் பகல் 12 மணிக்கு நடந்ததாகவும், இது வினோதமாக இருந்ததாக அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை, ஒரு வேளை இது படத்திற்கான ஸ்டண்ட் ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அது உறுதியாக தெரியவில்லை.
கடந்த 1972-ஆம் ஆண்டிற்கு பிறகு இந்த கல்லறை திறக்கப்படவில்லை, அரைநூற்றாண்டு காலமாக இது பயன்பாட்டிலே இல்லை,
குறிப்பிடத்தக்க சில கல்லறைகளைப் பார்க்க மக்கள் அடிக்கடி வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.