அந்த புகைப்படத்தை வைரல் செய்! நள்ளிரவு 12 மணிக்கு வீடியோ காலில் பேசிவிட்டு தூக்கில் சடலமாக தொங்கிய 20 வயது நர்ஸ்.. சிக்கிய கடிதம்
இந்தியாவில் நள்ளிரவில் நண்பரிடம் வீடியோ அழைப்பில் பேசிவிட்டு 20 வயதான நர்ஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் கான்பூரை சேர்ந்தவர் ரீபுல் (20). இவர் பல் மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவு 2 மணியளவில் ரீபுல் வசித்த வீட்டில் இருந்து ஏதோ பலத்த சத்தம் கேட்டதையடுத்து கீழே இருந்த வீட்டின் உரிமையாளர் அங்கு சென்று பார்த்தார்.
அப்போது ரீபுல் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து ரீபுல் சடலத்தை கைப்பற்றினார்கள். இறப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர், அதாவது நள்ளிரவு 12 மணிக்கு ரீபுல் தனது நண்பரிடம் வீடியோ அழைப்பில் பேசியது தெரியவந்துள்ளது.
மேலும் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் பொலிசார் கைப்பற்றினார்கள். ஆமன் என்ற ஆண் ஒருவரின் பெயருக்கு கடிதம் எழுத்தப்பட்டிருந்தது. எனக்கு அமைதி எங்கே உள்ளது? ஏன் மருத்துவமனைக்கு வராமல் இருக்கிறாய்? அந்த புகைப்படத்தை வைரல் செய்யுங்கள் என கேட்டு மிரட்டுகிறார் என எழுதப்பட்டுள்ளது.
பொலிசார் கூறுகையில், ரீபுல் ஏதோ சிக்கலில் சிக்கியிருக்கிறார், ஆமனை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தவுள்ளோம். விரைவில் சம்பவம் குறித்த முழு பின்னணி தெரியவரும் என கூறியுள்ளனர்.