காதலை ஏற்க மறுத்த இளம் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து இளைஞன் செய்த செயல்: கல்லால் அடித்து கொன்ற கிராம மக்கள்
இந்தியாவில் தனியாக வீட்டில் இருந்த இளம் பெண்ணை குத்தி கொலை செய்த நபரை கிராம மக்கள் கல்லால் அடித்து துடி துடிக்க கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுஷ்மிதா. இவர் சித்தூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில், பணி நிமித்தம் காரணமாக மருத்துவமனைக்கு சென்று வரும் போது, அதே கிராமத்தை சேர்ந்த கிரானைட் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த சின்னா என்ற இளைஞரை இவரை பின் தொடர்ந்து, காதலிப்பதாக கூறி வந்துள்ளார்.
ஆனால், இவரின் காதலை சுஷ்மிதா ஏற்க மறுத்துள்ளார். இருப்பினும் சின்னா தொடர்ந்து அவரை காதல் என்ற பெயரில் தொந்தரவு செய்து வர, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த சுஷ்மிதா இது குறித்து காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
இதனால் பொலிசார் சின்னாவை விசாரணைக்கு அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர். இதனால் கடும் ஆத்திரமடைந்த சின்னா, கடந்த வெள்ளிக் கிழமை சுஷ்மிதா தனியாக வீட்டில் இருப்பதை அறிந்து, வீட்டிற்குள் புகுந்து அவரை சரமாரியாக குத்திக் கொலை செய்துள்ளார்.
சுஷ்மிதாவின் அலறல் சத்தத்தைக் கேட்ட, அக்கம் பக்கத்தினர் வருவதை அறிந்த சின்னா, அவர்களிடம் இருந்து தப்புவதற்காக தனது கழுத்தை லேசாக அறுத்து கொண்டு உயிருக்கு போராடுவது போல கீழே விழுந்து நடித்துள்ளான்.
அவன் செவிலியர் சுஷ்மிதாவை கொலை செய்துவிட்டு தற்கொலை முயற்சி நாடகம் ஆடுவதை அறிந்த கிராம மக்கள் அனைவரும் ஆத்திரமடைந்த, அவர்கள் சின்னா மீது சரமாரியாக கற்களை வீசியும் அடித்தும் கொலை செய்துள்ளனர்.
இதற்கிடையில் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் இருவரின் சடலத்தையும் கைப்பற்றி சித்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.