செவிலியர்கள் ஜேர்மனிக்கு வேலைக்குச் செல்வதால் நாடொன்றில் செவிலியர்களுக்கு தட்டுப்பாடு
ஜேர்மனியில் நிலவும் செவிலியர் பற்றாக்குறையை சமாளிக்க அந்நாடு பிலிப்பைன்சிலிருந்து செவிலியர்களை வரவழைக்கிறது.
ஆனால், அதன் காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் செவிலியருக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜேர்மனிக்கு வேலைக்குச் செல்வதால் செவிலியர்களுக்கு தட்டுப்பாடு
ஜேர்மனியில் செவிலியர்களுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது. ஆகவே, வேறு நாடுகளிலிருந்து செவிலியர்களை வேலைக்கு வரவழைக்கிறது ஜேர்மனி.
குறிப்பாக, 2013ஆம் ஆண்டிலிருந்து, பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து ’Triple Win program’ என்னும் திட்டத்தின்கீழ் செவிலியர்கள் ஜேர்மனிக்கு வேலைக்கு அழைத்துவரப்படுகிறார்கள்.
விடயம் என்னவென்றால், பிலிப்பைன்சைவிட ஜேர்மனியில் அதிக ஊதியம் என்பதால் பிலிப்பைன்ஸ் நாட்டு செவிலியர்கள் பலர் ஜேர்மனிக்கு வேலைக்குச் செல்ல விரும்புகிறார்கள்.
ஆனால், இப்படி பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள செவிலியர்கள் ஜேர்மனிக்கு வேலைக்கு வருவதால், பிலிப்பைன்ஸ் மருத்துவ அமைப்பில் பிரச்சினை உருவாகியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள முக்கியமான மருத்துவமனைகளில் செவிலியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், அங்கு பணிபுரியும் செவிலியர்கள் நீண்ட நேரம் பணி செய்யும் நிலைக்கும், கூடுதல் பணிச்சுமைக்கும் ஆளாகியுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |