பாகிஸ்தான் கிரிக்கெட்டை நியூசிலாந்து அழித்துவிட்டது! கடும் வேதனையில் முன்னாள் வீரர் போட்ட டுவிட்: சோகத்தில் ரசிகர்கள்
நியூசிலாந்து கிரிக்கெட் அணி, திடீரென்று பாகிஸ்தான் அணியுடனான தொடரை ரத்து செய்வதாக கூறியதால், இது ரசிகர்களுக்கு மட்டுமின்றி பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் பலருக்கும் கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2003-04-ஆம் ஆண்டுக்கு பின் பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாடாமல் இருந்த நியூசிலாந்து அணி, கடந்த 17 ஆண்டுகளுக்கு பின் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருந்தது.
அதன் படி இரு அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று துவங்கவிருந்த நிலையில், நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்த தொடர்களை ரத்து செய்வதாக அறிவித்தது.
NZ just killed Pakistan cricket 😡😡
— Shoaib Akhtar (@shoaib100mph) September 17, 2021
இதையடுத்து நியூசிலாந்து அணியினர் பாகிஸ்தானில் இருந்து வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் தொடரை நியூசிலாந்து ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கபட்டது.
இது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட்டை நியூசிலாந்து அழித்துவிட்டதாக வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.