சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி குறித்த முக்கிய அறிவிப்பு!
2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த பெறுபேறுகள் வெளியாகும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
சாதாரண தரப் பரீட்சை இம்மாதத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், G.C.E.O/L பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது இறுதிக்கட்டத் தயாரிப்பில் உள்ளன.
“சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளன. இந்த மாதத்திற்குள் தேர்வு முடிவுகளை வெளியிட தயாராக உள்ளோம். பரீட்சை முடிவுகளை கூடிய விரைவில் வெளியிட உத்தேசித்துள்ளேன்” என அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
தற்போது பல்வேறு சோதனைகளை நடத்தி முடிவை இறுதி செய்து வருவதாகவும், இன்னும் இரண்டு வாரங்களில் முடிவுகள் வெளியிட தயாராகி விடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
"செப்டெம்பர் மாதத்திற்குள் நிச்சயமாக முடிவுகளை வெளியிட இலக்கு வைத்துள்ளோம்" என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |