கொரோனா தடுப்பூசி பரிசாக 116 மில்லியன் டொலர் தொகையை அறிவித்த மாகாணம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், கொரோனா தடுப்பூசி பரிசு தொகையாக 116 மில்லியன் டொலர் அறிவித்துள்ளது.
மாகாணத்தில் அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வதை ஊக்குவிக்கும் பொருட்டே, நாட்டிலேயே மிக அதிக தொகையை பரிசாக அறிவித்துள்ளனர்.
கலிபோர்னியா மாகாணம் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளில் இருந்தும் அடுத்த மாதம் முதல் வெளியேற முடிவு செய்துள்ளது.
இதனையடுத்தே, கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வதை ஊக்குவிக்க பரிசு திட்டத்தை கலிபோர்னியா மாகாணம் அறிவித்துள்ளது.
தடுப்பூசி பெறத் தகுதியான 34 மில்லியன் மக்களில் இதுவரை 63% மக்கள் மட்டுமே தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர். தொடர்ந்து தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் மக்களின் ஆர்வம் குறைந்து காணப்படுவதாக அதிகாரிகள் தரப்பு கண்டறிந்தனர்.
ஜூன் 15ல் அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க முடிவு செய்துள்ள நிலையில், அதே நாளில் தெரிவாகும் 10 பேர்களுக்கு தலா மில்லியன் டொலர் பரிசளிக்க உள்ளனர்.
இரண்டாவது பரிசாக 30 பேர்களுக்கு தலா 50,000 டொலர் தொகை அளிக்க உள்ளனர். இந்த 40 பேர் பட்டியலில் இடம் பெறாத 2 மில்லியன் மக்களுக்கு தலா 50 டொலருக்கான பரிசு அட்டைகள் வழங்கப்பட உள்ளன.
முன்னதாக ஓஹியோ மாகாணம் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களில் ஒருவருக்கு 1 மில்லியன் டொலர் பரிசளித்துள்ளது.
கொலராடோ மற்றும் ஓரிகான் மாகாணங்களும் 1 மில்லியன் டொலர் பரிசுகளை வழங்கியுள்ளன.