கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 226 இளைஞர்களுக்கு இதய பிரச்சினை... அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள அதிகாரிகள்
கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, 226 பதின்ம வயதினருக்கு இதய அழற்சி பிரச்சினை உருவாகியுள்ளதால், அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் அவசர கூட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார்கள்
. பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசியானாலும் சரி, மொடெர்னா தடுப்பூசியானாலும் சரி, தடுப்பூசி பெற்றுக்கொண்ட பதின்ம வயதினர் 226 பேர், இதய அழற்சி பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஆகவே, எதிர்பார்த்ததைவிட அதிகம் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள், இம்மாதம் (ஜூன்) 18ஆம் திகதி கூடி, இது குறித்து விவாதிக்க இருக்கிறார்கள்.
இந்த பதின்ம வயதினர் தடுப்பூசி பெற்றுக்கொண்டதைத் தொடர்ந்து myocarditis அல்லது pericarditis என்னும் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
Myocarditis என்பது இதய தசைகளில் ஏற்படும் அழற்சி, pericarditis என்பது இதயத்தை சூழ்ந்துள்ள உறையான pericardium என்னும் பகுதியில் ஏற்படும் அழற்சி.
பாதிக்கப்பட்டுள்ள 226 பேரில், 3 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள், 15 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள், 41 பேருக்கு தொடர்ந்து அறிகுறிகள் உள்ளன. மீதமுள்ள 167 பேர் குணமடைந்துவிட்டார்கள்.