ஆபரேஷன் சிந்தூரில் ராணுவ வீரர்களுக்கு உதவிய சிறுவனுக்கு பரிசு வழங்கிய அதிகாரிகள்
ஆபரேஷன் சிந்தூரின் போது ராணுவ வீரர்களுக்கு உதவிய 10 வயது சிறுவனுக்கு ராணுவ அதிகாரிகள் நினைவு பரிசு ஒன்றை வழங்கியுள்ளனர்.
நினைவு பரிசு
இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற மோதலில் இந்திய அரசு ஆபரேஷன் சிந்தூர் என்னும் நடவடிக்கையை மேற்கொண்டது.
ஆபரேஷன் சிந்தூரின் போது பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 10 வயது சிறுவனான ஷர்வன் சிங் ராணுவ வீரர்களுக்கு உதவி செய்துள்ளார். அதாவது அச்சிறுவன், ராணுவ வீரர்களுக்கு தண்ணீர், பால், லஸ்ஸி உள்ளிட்டவற்றை வழங்கி தாகத்தை தீர்த்துள்ளார்.
இந்நிலையில், பெரோஸ்பூரைச் சேர்ந்த ஷர்வன் சிங்கை நேரில் அழைத்து பேசிய மேஜர் ஜெனரல் ரன்ஜித்சிங், சிறுவனை பாராட்டி நினைவு பரிசு ஒன்றை வழங்கினார்.
பின்னர் பேசிய சிறுவன், "வளர்ந்த பிறகு நானும் ஒரு ராணுவ வீரனாக வேண்டும்" என்று நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |