ஈரானுக்கு எதிராக முடிவை தாமதப்படுத்தும் அமெரிக்கா: எண்ணெய் விலைகள் கடும் வீழ்ச்சி
இஸ்ரேல்-ஈரான் மோதலில் அமெரிக்காவின் ஈடுபாடு குறித்த முடிவை வெள்ளை மாளிகை தாமதப்படுத்தியதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை எண்ணெய் விலைகள் சரிந்தன.
ஈடுபடுவதா இல்லையா
ஈரான் மீது அணு ஆயுத அச்சுறுத்தல் காரணமாக திடீர் தாக்குதலை முன்னெடுத்த இஸ்ரேல், தற்போது அமெரிக்காவையும் களமிறங்க கட்டாயப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் முடிவை அறிவிப்பதாக கூறிய ஜனாதிபதி ட்ரம்ப் தற்போது 2 வாரங்களில் தமது முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையிலேயே எண்ணெய் விலைகள் கடும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 1.57 டொலர் அல்லது சுமார் 2 சதவீதம் குறைந்து 77.28 டொலர் என இருந்தது.
ஜூலை மாதத்திற்கான அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை கச்சா எண்ணெய் விலை 0.7 சதவீதம் அதிகரித்து 75.66 டொலர் என பதிவாகியுள்ளது. ஈரானில் உள்ள அணு ஆயுத இலக்குகளை இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கிய பிறகு வியாழக்கிழமை எண்ணெய் விலைகள் கிட்டத்தட்ட 3 சதவீதம் உயர்ந்தன.
இஸ்ரேல்-ஈரான் மோதலில் அமெரிக்கா ஈடுபடுவதா இல்லையா என்பதை அடுத்த இரண்டு வாரங்களில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முடிவு செய்வார் என்று வெள்ளை மாளிகை கூறியதைத் தொடர்ந்து பிரெண்ட் கச்சா எண்ணெய் விலைகள் குறைந்தன.
ஈரானின் கடல் பகுதி
இருப்பினும், இஸ்ரேலும் ஈரானும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டிருக்கும் அதே வேளையில், மோதல் உக்கிரமடைந்து எண்ணெய் உள்கட்டமைப்புகள் மீது பார்வையை திருப்பும் ஒரு எதிர்பாராத நடவடிக்கை எப்போதும் இருக்கலாம் என்றும் நிபுணர்கள் பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே, மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்திற்கு பழிவாங்கும் விதமாக, ஹார்முஸ் ஜலசந்தியை போக்குவரத்துக்கு மூடுவதாக ஈரான் கடந்த காலங்களில் அச்சுறுத்தியுள்ளது.
இந்த ஜலசந்தியை மூடுவது வர்த்தகத்தை கட்டுப்படுத்துவதுடன் உலகளாவிய எண்ணெய் விலைகளும் பாதிக்கலாம். வணிகக் கப்பல்கள் ஓமானுக்கு அருகில் பயணிக்கின்றன, மேலும் கடல்சார் நிறுவனங்கள் ஜலசந்தியைச் சுற்றியுள்ள ஈரானின் கடல் பகுதியைத் தவிர்க்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்துகின்றன.
இஸ்ரேல் ஏற்றுமதி உள்கட்டமைப்பைத் தாக்கும் அல்லது ஈரான் ஜலசந்தி வழியாக செல்லும் போக்குவரத்தை சீர்குலைக்கும் வகையில் மோதல் அதிகரிக்கும் என்றால், எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டொலர் என்ற நிலையைத் தொடும் என்றே கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |