இன்று சாதாரண தர பரீட்சை ஆரம்பம் - நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விசேட வேலைத்திட்டம்
இன்று 2023 ஆம் ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சை ஆரம்பமாகியுள்ளதால் விசேட வேலைத்திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
விசேட வேலைத்திட்டம்
அதன்படி 2000 பொலிஸார்கள் பரீட்சையின் பாதுகாப்பிற்காக ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த பரீட்சையானது ஆரம்பமாவதற்கு முன் தேவையான அனைத்து முன்னாயத்தங்களும் ஏற்கனவே எடுக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டிருந்தது.
மேலும் கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சையில் 452,979 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதுடன் நாடளாவிய ரீதியில் 3,527 நிலையங்களில் பரீட்சை நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |