மாணவரின் கையை அரிவாளால் வெட்டிய முதியவர்! காரணம் இதுதான்
தமிழகத்தின் திருப்பூரில் இரவு நேரத்தில் பக்கத்து வீட்டு முதியவரை தூங்க விடாமல், நண்பர்களுடன் பப்ஜி விளையாடி இடையூறு செய்து வந்த வாலிபரின் கையை முதியவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் முருகம்பாளையம் பாறைக்காட்டை சேர்ந்தவர் கார்த்திக் (19). தாராபுரத்தில் உள்ள அரசு ஐ.டி.ஐ.,யில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
கார்த்திக் வீட்டுக்கு அருகே உள்ள துணி துவைக்கும் கல்லில் அமர்ந்து தனது நண்பர்களுடன் அடிக்கடி பப்ஜி விளையாடுவது வழக்கம்.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் கார்த்திக் நண்பர்களுடன் அமர்ந்து பப்ஜி விளையாடியுள்ளார்.
அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த ராமசாமி (65) என்பவர் தூங்குவதுக்கு இடையூறாக இருப்பதாக கூறி சத்தம் போட்டார். இதனால் இருதரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த ராமசாமி வீட்டுக்குள் சென்று அரிவாளை எடுத்து வந்து கார்த்திக்கை வெட்டியுள்ளார். அதில் கார்த்திக் கையில் வெட்டு விழுந்தது.
காயமடைந்த கார்த்திக் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்த புகாரின் பேரில் வீரபாண்டி பொலிசார் விசாரணை நடத்தி ராமசாமியை கைது செய்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட ராமசாமி, ஒரு கொலை வழக்கு தொடர்பாக தண்டனை அனுபவித்து, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் சிறையில் இருந்து விடுதலையாகி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.