சாலையோரம் ஆதரவற்று இறந்து கிடந்த முதியவர்! அவர் உடைமைகளை சோதித்த போது தெரிந்த நம்பமுடியாத உண்மை... புகைப்படம்
தமிழகத்தில் ஆதரவற்று சாலையோரம் இறந்து கிடந்த முதியவரின் வங்கிக்கணக்கில் ரூ.56 லட்சம் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
மதுரை அரசு மருத்துவமனை முன்பாக சாலையோரம் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆதரவற்ற முதியவர் இறந்துகிடந்த நிலையில் காவல் துறையினரால் சடலமாக மீட்கப்பட்டார்.
அப்போது அவரது உடைமைகளை பரிசோதனை செய்தனர். அப்போது அவரது ஒரு வங்கிக்கணக்கில் ரூ.20 லட்சம், மற்றொரு வங்கிக் கணக்கில் ரூ.36 லட்சம் என பணம் இருந்ததை கண்டு அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தனர்.
ஏனெனில் இவ்வளவு பணம் வைத்திருப்பவர் இப்படி சாலையில் ஆதரவற்று இறந்து கிடக்கிறாரே என நினைத்தனர்.
இதையடுத்து உயிரிழந்துள்ள நபர் யார் என்பது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உண்மைகள் தெரியவந்தது.
அவரது பெயர் ராதா என்பதும் நாகமலைபுதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் இவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றியவர் என்பதும் தெரியவந்துள்ளது.