பழைய சோறு சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா? இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது
பழைய சாதம் நம் முன்னோர்களின் உடல் நலத்திற்குப் பக்கபலமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.
ஆனால் பீட்சா, பர்கர், நூடுல்ஸ் போன்ற துரித உணவு களால் பழைய சோற்றின் மகத்துவம் இளைய தலைமுறையினருக்கு தெரியாமல் இருந்தது.
ஆனால் சமீபத்திய ஆய்வு அறிக்கையின்படி, இளைய தலைமுறையினரும் பழைய சோறு உணவை விரும்ப தொடங்கியிருக்கிறார்கள்.
பழைய சோறு சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்
காலையில் இதைச் சாப்பிடுவதால், வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்; உடலில் அதிகமாக இருக்கும் உடல் உஷ்ணத்தைப் போக்கும்.
பழைய சாதத்தில் நார்ச்சத்து தன்மை இருப்பதால் மலச்சிக்கலை நீக்கும்.
ஒவ்வாமைப் பிரச்னைகளுக்கும், தோல் தொடர்பான வியாதிகளுக்கும் நல்ல தீர்வுதரும்.
பழைய சாதம் சாப்பிட்டால் தூக்கம் வரும், உடல்பருமன் உண்டாகும் என்பதெல்லாம் உண்மையல்ல, இது, எல்லா உணவுகளுக்குமே பொருந்தக்கூடியது. சர்க்கரைநோயாளிகள் மட்டும் மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு அளவோடு சாப்பிடலாம்.
அதே போல காய்ச்சல், ஜலதோஷம் இருப்பவர்கள் பழைய சோறு சாப்பிடக்கூடாது, ஏனெனில் இது உடலுக்கு மிகவும் குளர்ச்சி தரக்கூடியதாகும்.