வெளிநாட்டில் வசிக்கும் மூத்த மகன்..பெற்ற தாயை கொன்று ஆற்றில் வீசிய கொடூரன்
இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் சொத்து தகராறில் பெற்ற தாயை மகனே கொலை செய்து ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காணாமல் போன 74 வயது மூதாட்டி
ராய்காட் மாவட்டத்தில் கடந்த செவ்வாய்கிழமை இரவு ஜூஹூ பொலிஸாரிடம் கல்பதரு சொசைட்டியின் பாதுகாப்பு மேற்பார்வையாளர் ஒருவர் புகார் ஒன்றை அளித்தார். அதில் வீணா கபூர் என்ற 74 வயது மூதாட்டி காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கிய பொலிஸார், வீணா கபூரின் மகன் பன்வேலில் இருந்தபோது அவரது தாயின் செல்போன் இருப்பிடம் அவரது கட்டிடத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது.
Representative image
அதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் மூதாட்டியின் 43 வயது மகன் மற்றும் அவருடைய பணியாள் (25) ஆகிய இருவரை கைது செய்தனர்.
பேஸ்பால் மட்டையால் தாக்கி
கொலை அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குறித்த நபர் தனது தாயின் தலையில் பலமுறை பேஸ்பால் மட்டையால் தாக்கி, ஆத்திரத்தில் கொலை செய்ததாகவும், பின்னர் அவரது உடலை ராய்காட் மாவட்டத்தில் உள்ள மாத்தேரான் அருகே ஆற்றில் வீசியதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் ஐபிசி 302 மற்றும் 201 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
@MumbaiPolice
மேலும், கொல்லப்பட்ட மூதாட்டியின் மூத்த மகன் அமெரிக்காவில் வசித்து வருவதாகவும், சொத்து தகராறில் தாயை அவர் கொன்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.